Wednesday, 11 September 2013

குடையும் வண்டுகள்..


நீச்சல் அறியாமல்

இளமை  நதியில்

தவித்த நாட்களில்.. உன்

பார்வை வண்டுகள்

தூவி சென்ற   

உன் இதயத்தின்

மகரந்தங்களால்

சூலுற்ற

இந்த நினைவுகள்....

தினமும் என்னை  

குடையும் வண்டுகள்!!!

Tuesday, 22 January 2013

விசாலி


அணைப்ப தோனகை  

அகத்தி லோப்புகை –

உறவில்லா என்னிடம்

உனக்கே னோப்பகை?

Tuesday, 1 January 2013

இடி

இடி
வானத் தாய்
வலியில்
அலறினாள்
அவளின்
மழலை
மழையாக
பிறந்தாள்!!!

Sunday, 23 December 2012

தையலால் கிழிந்தேன்

இதயத்தை
கிழிப்பவர்க்கு
பெயரா
தையல்?...
கிழிந்ததால் 
அறிந்தேன்
இதுவரை
ஊசியாக
இல்லை
முள்ளாகவே 
தைத்தாள்!    
உன் வரவும்
தைத்தது.. 
உன் பிரிவோ
வதைத்தது!!!